தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், ‘‘நான் என்னுடைய வாக்குரிமைக்குரிய ஜனநாயக கடமையை ஆற்றியிருக்கிறேன். அதேபோல் வாக்குரிமை பெற்றிருக்கக்கூடிய அனைவரும் தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றிடவேண்டும். மறந்திடாமல், அதை புறக்கணித்திடாமல், தங்களது ஜனநாயக கடமையை ஆற்றிடவேண்டும் என்று உங்கள் மூலமாக நான் வேண்டுகோள் விடுக்கிறேன்’’ என்றார். பின்னர் நிருபர்கள், திமுகவிற்கான வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘நீங்கள் நினைப்பது போல இந்தியாவுக்கு வெற்றி தான்’’ என்று பதில் அளித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பதிவில், “நாடு காக்கும் ஜனநாயகக் கடமையை ஆற்றினேன்!. அனைவரும் தவறாது வாக்களியுங்கள். குறிப்பாக, First time voters-ஆன இளைஞர்கள் ஆர்வத்தோடு வாக்களியுங்கள்! நம் இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில்’’ என குறிப்பிட்டுள்ளார்.
The post சென்னை தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வரிசையில் நின்று வாக்களித்தார்: நீங்கள் நினைப்பது போல் இந்தியாவுக்கு வெற்றி தான் என்று பேட்டி appeared first on Dinakaran.