ஹாட்ரிக் தோல்வியால் துவண்டிருந்த மும்பை அணி கேப்பிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்சை அடுத்தடுத்து வீழ்த்தி எழுச்சி கண்டது. ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து அசத்துமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிஎஸ்கே அணிக்கு எதிராக போராடி தோற்றது. இந்த நிலையில், பஞ்சாப் – மும்பை அணிகள் 3வது வெற்றிக்காக இன்று முட்டி மோதுகின்றன. சென்னையுடன் மோதிய கடந்த போட்டியில் ரோகித் அதிரடியாக சதம் விளாசினாலும், மற்ற வீரர்கள் கணிசமாக பங்களிக்கத் தவறியது தோல்விக்கு காரணமாக அமைந்தது. எனவே, ரன் குவிப்பு மட்டுமல்லாது பந்துவீச்சிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் மும்பை உள்ளது. இரு அணிகளுமே 3வது வெற்றிக்காக வரிந்துகட்டுவதால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.
The post 3வது வெற்றிக்காக இன்று வரிந்துகட்டும் மும்பை-பஞ்சாப் appeared first on Dinakaran.