பல கோடி தங்க நகைகள், கிரானைட் கற்கள் பறிமுதல்

மதுரை: மதுரை மாவட்ட எல்லையான ரிங்ரோடு பகுதியில் நேற்று வந்த லாரியை வணிக வரித்துறை பறக்கும் படையினர் நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் இருந்தது தெரிந்தது. அந்த லாரியை அமலாக்கப்பிரிவு அதிகாரியிடம் ஒப்படைத்தனர். அதுபோல சிவகங்கையிலிருந்து கர்நாடகாவுக்கு சென்ற லாரியை, அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் கிரானைட் கற்கள் இருந்தது. அதற்கான ஆவணங்கள் சரிவர இல்லாததால் பறிமுதல் செய்தனர்.

The post பல கோடி தங்க நகைகள், கிரானைட் கற்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: