சாலை விபத்தில் பெயிண்டர் பலி

மல்லசமுத்திரம், ஏப்.18: சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி அருகே ரத்தனவேல் கவுண்டர்காடு பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன்(40). பெயிண்டரான இவர், கடந்த 14ம் தேதி ஈரோட்டில் பணி முடிந்து, பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். இரவு 11.30 மணியளவில் மல்லசமுத்திரம் அருகே சூரியகவுண்டம்பாளையம் பஸ் ஸ்டாப் பகுதியில் வந்த போது, நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில், தலையில் படுகாயமடைந்த அவரை, அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு, திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட சீனிவாசன், தீவிர சிகிச்சை பலனின்றி, நேற்று காலை உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், மல்லசமுத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த சீனிவாசனுக்கு மகேஸ்வரி(35) என்ற மனைவியும், 10 வயதில் மகளும், 7 வயதில் மகனும் உள்ளனர்.

The post சாலை விபத்தில் பெயிண்டர் பலி appeared first on Dinakaran.

Related Stories: