வாக்காளர்களுக்கு விநியோகம் செய்த ₹22 ஆயிரம் சிக்கியது அணைக்கட்டு அருகே

அணைக்கட்டு, ஏப்.17: அணைக்கட்டு அருகே வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய வைத்திருந்த ₹22 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளிகொண்டா பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்படுவதாக தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று புகார் வந்தது. அதன்பேரில், தேர்தல் பறக்கும் படை அலுவலர் அணைக்கட்டு துணை பிடிஓ செல்வி தலைமையிலான குழுவினர் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது, அங்கு வீடு, வீடாக வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்து கொண்டிருந்த சிலர் அதிகாரிகள் வருவதை பார்த்ததும் பணத்தை அங்கே போட்டுவிட்டு தப்பி ஓடினர். இதையடுத்து பறக்கும் படையினர், மர்ம நபர்கள் வீசிச்சென்ற ₹22,000ஐ பறிமுதல் செய்து தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் வேண்டாவிடம் ஒப்படைத்தனர். மேலும், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பணம் பட்டுவாடா செய்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

The post வாக்காளர்களுக்கு விநியோகம் செய்த ₹22 ஆயிரம் சிக்கியது அணைக்கட்டு அருகே appeared first on Dinakaran.

Related Stories: