தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அதிமுக – நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல்..!!

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அதிமுக – நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் வாக்காளர்களை கவர வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சி இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மற்றும் கைகலப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் தமிழ் தமிழர் கட்சியினருக்கு காலை 11 மணியளவில் பிரச்சாரம் செய்வதற்காக நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.

இதேபோல், அதிமுகவினருக்கு காலை 12 மணியளவில் பிரச்சாரம் செய்வதற்காக நேரம் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்பாக அதிமுகவினர் பிரச்சாரம் செய்ததால் நாம் தமிழர் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தங்களது ஒதுக்கப்பட்ட நேரத்தில் நீங்கள் எப்படி பிரச்சாரம் செய்யலாம்? என அதிமுகவினருடன் நாம் தமிழர் கட்சியினர் வாக்குவாதம் செய்துள்ளனர். ஒருகட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது. இதையடுத்து, நாம் தமிழர் கட்சியினர் வந்த வாகனத்தை அதிமுகவினர் உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அதிமுக – நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல்..!! appeared first on Dinakaran.

Related Stories: