பெலகாவி தொகுதியில் அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரின் மகன் மிருணாள் ரவீந்திர ஹெப்பால்கர், பாஜ வேட்பாளரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான ஜெகதீஷ் ஷெட்டரை எதிர்த்து போட்டியிடுகிறார். முன்னதாக சஞ்சய் பாட்டீல் பேசுகையில், ‘பெலகாவியில் பாஜவுக்கு ஆதரவாக ஏராளமான பெண்கள் பிரசாரம் செய்ய வருகின்றனர். எனது மூத்த சகோதரி லட்சுமி ஹெப்பால்கர் தூக்க மாத்திரை சாப்பிட வேண்டும். அல்லது இரவு தூங்கும் முன் ‘கூடுதல் பெக்’ எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்று பேசினார்.
இவர் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. இதுகுறித்து கர்நாடகா காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கையில், ‘பெண்களுக்கு எதிரான கருத்துகளை பாஜ தெரிவித்து வருவது அதிகரித்து வருகிறது. பாஜ- மஜத செல்வாக்கு சரிய தொடங்கியுள்ளதால், அவர்கள் பெண்களுக்கு எதிரான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். சர்ச்சை கருத்து குறித்து சஞ்சய் பாட்டீல் கூறுகையில், ‘அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரை, ஒரு ‘பெக்’ சரக்கு அடிக்கும்படி கூறவில்லை.
உடல் புத்துணர்ச்சிக்காக கூடுதலாக, ஒரு ‘பெக்’ எனர்ஜி டிரிங்க் குடிக்கும்படி கூறினேன். என் வீட்டின் முன்பு மகளிர் காங்கிரசார் போராட்டம் நடத்தியதால், எனது தூக்கம் போய் விட்டது’ என்றார். இதே போல் மகளிருக்கு பஸ்களில் இலவச பயணம் காங்கிரஸ் அரசு கொடுத்துள்ளதால் ‘மகளிர் வழிமாறி செல்கின்றனர்’ என்று முன்னாள் முதல்வர் குமாரசாமி பேசியது ஏற்கனவே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post இரவு தூங்கும் முன் ‘எக்ஸ்ட்ரா ஒரு பெக்’ எடுத்துக்குங்க: கர்நாடக பெண் அமைச்சர் குறித்து பாஜக மாஜி எம்எல்ஏ பேச்சால் சர்ச்சை appeared first on Dinakaran.