ரூபாலாவின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ராஜபுத்திர சமூகத்தினர், ராஜ்கோட் வேட்பாளர் ரூபாலாவை நீக்க வலியுறுத்தி வருகின்றனர்.மேலும் இப்பிரச்சனை ராஜ்புத் சமூகத்தினர் அதிகம் வாழும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் பாஜகவிற்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் க்ஷத்திரிய மகா சம்மேளனம் சார்பில் 1.5 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்ற பிரமாண்ட மாநாடு நடைபெற்றது. இதில் இதர க்ஷத்திரிய சமூகங்களின் தலைவர்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோர் அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்று பேசினர். அவர்கள் உடனடியாக பாஜக வேட்பாளர் ரூபாலாவை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். வரும் 19ம் தேதி வேட்பாளர் வாபஸ் பெறுவதற்கான இறுதி நாளாகும். எனவே ரூபாலாவை வாபஸ் பெறாவிட்டால் ஏப்ரல் 19ம் தேதிக்கு பின்னர் கடுமையான போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் க்ஷத்திரிய சமூக தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில், ஜம்முவை சேர்ந்த ராஜ்புத் சமூக இளைஞர் அமைப்பு ஒன்று ரூபாலாவின் நாக்கை அறுத்து வருவோருக்கு ரூ.11 லட்சம் பரிசு அறிவித்துள்ளது. இதனிடையே ராஜ்கோட்டில் ராஜ்புத் சமூகத்தினர் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு அமைச்சர் ரூபாலாவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
The post ராஜ்புத் சமூகத்தினர் ஒரு லட்சம் பேர் அமைச்சர் ரூபாலாவுக்கு எதிராக போராட்டம்.. நாக்கை .அறுத்து வருவோருக்கு ரூ.11 லட்சம் பரிசு : திணறும் பாஜக!! appeared first on Dinakaran.