பனையில் இருந்து விழுந்து தொழிலாளி பலி

ெநல்லை,ஏப்.15: நெல்லை மாவட்டம் மேலச்செவல் ராஜீவ்காந்திநகரை சேர்ந்தவர் தங்கபாண்டி என்ற பாண்டி(69). பனைத்தொழிலாளி. இவர் கடந்த மாதம் 29ம் தேதி அங்குள்ள வெள்ளப்பாண்டி என்பவரது தோட்டத்து பனைமரத்தில் ஏறியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மரத்தில் இருந்து தவறி விழுந்தார். இதில் பலத்த அடிபட்ட அவர் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு நேற்று அவர் இறந்தார். இது குறித்து இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பனையில் இருந்து விழுந்து தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Related Stories: