கடந்த 10 ஆண்டுகளில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றாத காவி கட்சி இப்போது அளித்துள்ள உறுதிகளை மக்கள் நம்ப தயாராக இல்லை. பாஜவுக்கு தைரியம் இருந்தால் கடந்த 2014, 2019 தேர்தல் அறிக்கைகளை மீண்டும் வௌியிட்டு, அதில் எந்த வாக்குறுதியை நிறைவேற்றியது என்று தெரிவிக்க வேண்டும்.
பொய்யர்கள் அடங்கிய குழுவினர் தயாரித்த பாஜவின் தேர்தல் அறிக்கை பொய் சொல்வதில் உலக சாதனையை முறியடித்துள்ளது” என்று காட்டமாக பதிவிட்டுள்ளார். மேலும், “பொதுமக்கள் தங்களுக்கு பிரகாசமான எதிர்காலத்தை தேர்ந்தெடுக்க இந்தியா கூட்டணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என முடிவெடுத்து விட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார். அத்துடன் “பாஜ வேலை செய்யாது” என்ற ஹேஷ்டேக்கையும் இணைத்துள்ளார்.
The post பொய்யில் உலக சாதனை முறியடிப்பு: சமாஜ்வாடி கடும் தாக்கு appeared first on Dinakaran.