இதை பார்த்த பாஜ வேட்பாளர் நடிகை ராதிகா, எதிர்த்து நிற்கும் வேட்பாளர்களுக்கு டப் கொடுக்க வேண்டும் என்பதற்காக கடந்த சில நாட்களாக வாக்கு சேகரிக்க செல்லும் இடமெல்லாம், ‘‘தேர்தலில் வெற்றிபெற்றால் நான் எங்கும் போக மாட்டேன். விருதுநகரில் பேராலி ரோட்டில் எனது வீடு இருக்கு.
அங்கேயே தங்கிவிடுவேன்’’ என்று கூறி வருகிறார். இதை கேட்ட விருதுநகர் வாக்காளர்கள், நமக்கு தெரியாமல் நம்மூரில் எங்கு ராதிகாவின் வீடு உள்ளது என குழம்பி வருகின்றனர். விபரம் தெரிந்த வாக்காளர்களோ, ‘‘பேராலி ரோட்டில் தனியார் மில் ஓனர் ஒருவரின் வீட்டில்தான் சரத்குமார் வந்தால் தங்குவார். அங்குதான் தற்போது ராதிகாவும், சரத்குமாரும் தங்கியுள்ளனர். அந்த வீட்டைபோய் தனது வீடு என புருடா விடுகிறார்.
தேர்தலுக்குள் இன்னும் என்னென்ன பொய் மூட்டையை அவிழ்த்து விட போகிறாரோ’’ என தலையில் அடித்து கொள்கின்றனர். பாஜவில் இருக்கிற தலைவர்கள் எல்லாம் ஏற்கனவே வாய்க்கு வந்த பொய்களை எல்லாம் அவிழ்த்து விட்டு பலரை மிரட்டி பணம், சொத்துக்களை ஆட்டைய போட்டு வருகின்றனர். சமீபத்தில் பாஜவில் சேந்த ராதிகாவும் பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டுள்ளதை பார்த்த மக்கள் பாஜவில் சேர்ந்தாலே பொய், ஆட்டைய போடுவது என எல்லாம் தானாக வந்துவிடுமோ என்று கிண்டலடித்து வருகின்றனர்.
The post பாஜவில் சேர்ந்தாலே தானே வந்துடுமோ…தங்க இடம் கொடுத்தா வீட்டையே ஆட்டைய போடுவாங்க போலயே…ராதிகாவின் பலே பிளான் appeared first on Dinakaran.