அறந்தாங்கியில் வாகன சோதனை ஆவணமின்றி காரில் எடுத்து சென்ற ₹1லட்சம் பறிமுதல்

அறந்தாங்கி, ஏப்.14:புதுக்கோட்டை மாவட்டம் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கியில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு சென்ற பணத்தை தேர்தல் கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அளித்தனர்.

அறந்தாங்கி நகராட்சிக்குட்பட்ட அறந்தாங்கி காரைக்குடி சாலை சோதனை சாவடியில் நேற்று தேர்தல் கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.அப்போது அறந்தாங்கி அருகே அழியாநிலையை சேர்ந்த பிரசன்னா என்பவர் உரிய ஆவணம் இல்லமால் காரில் கொண்டு வந்த ₹1லட்சத்து 3 ஆயிரத்து 250ஐ கைப்பற்றி ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும் அறந்தாங்கி கோட்டாட்சியருமான சிவக்குமாரிடம் வழங்கினார்.

The post அறந்தாங்கியில் வாகன சோதனை ஆவணமின்றி காரில் எடுத்து சென்ற ₹1லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: