வெள்ளப்பட்டியில் தொழிலாளியை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது

தூத்துக்குடி, ஏப்.14:தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் 6வது தெருவைச் சேர்ந்த வேல்பாண்டி மகன் ராஜவேல்(44), வெள்ளப்பட்டி பகுதியில் மரக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு 7 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி மனைவியும், ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ராஜவேல், அவரது மனைவி மீது சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து திட்டியுள்ளார். இதைத்தொடர்ந்து அவர்கள் இடையே நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த ராஜவேல் மனைவியின் தம்பியும், கீழஅரசடி வெள்ளப்பட்டி, அந்தோனியார் கோயில் தெருவைச் சேர்ந்த ஆலோசனை மரியான் மகனுமான ஆலோசனை பெஞ்சமின் வினோபா(21) ராஜவேலிடம் தனது அக்காள் பிரச்னை குறித்து கேட்டு கண்டித்துள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஆலோசனை பெஞ்சமின் வினோபா, ராஜவேலை அவதூறாக பேசியதோடு அரிவாளால் வெட்டியுள்ளார். இதனால் காயமடைந்த ராஜவேல் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் இதுகுறித்து ராஜவேலின் தங்கையும், கிருஷ்ணாபுரம் 2வது தெருவைச் சேர்ந்த மாரிமுத்து மனைவியுமான ஆனந்தி(32) அளித்த புகாரின்பேரில் தூத்துக்குடி தாளமுத்துநகர் இன்ஸ்பெக்டர் ஆதம்அலி வழக்குப்பதிந்து, ஆலோசனை பெஞ்சமின் வினோபாவை கைது செய்தார்.

The post வெள்ளப்பட்டியில் தொழிலாளியை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: