70 தென்னங்கன்றுகள் வெட்டி சாய்ப்பு

மல்லசமுத்திரம், ஏப்.14: மல்லசமுத்திரம் அருகே திமுக நிர்வாகி தோட்டத்தில், 70 தென்னங்கன்றுகளை வெட்டி சாய்த்த மர்ம நபர்கள் குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் ஒன்றியம், மங்களம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம்(56). இவர் திமுக விவசாய அணி செயலாளராக உள்ளார். இவருக்கு சொந்தமாக சின்னகாளிப்பட்டியில் 5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்தில் சுமார் 400 தென்னங்கன்றுகளை நட்டு வளர்த்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம், அவரது நிலத்தில் இருந்த 70 தென்னங்கன்றுகளை மர்ம நபர்கள் வெட்டி சாய்த்துள்ளனர். நேற்று காலை தோட்டத்துக்கு சென்ற செல்வம், தென்னங்கன்றுகள் வெட்டி சாய்க்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து செல்வம் மல்லசமுத்திரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். எஸ்ஐ ரஞ்சித்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post 70 தென்னங்கன்றுகள் வெட்டி சாய்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: