இந்தநிலையில் கொல்கத்தாவிலிருந்து 184 கிமீ தொலைவில் ஒரு ஓட்டலில் போலி ஆதார் அட்டை கொடுத்து தங்கியிருந்த முசாவீர் உசேன் (30) மற்றும் அப்துல் மதீன் (30) ஆகிய இருவரையும் நேற்று முன் தினம் கைது செய்தனர். அவர்களை பெங்களூருவிற்கு அழைத்து சென்று நேற்று காலை நீதிபதியிடம் ஆஜர்படுத்தினர். குண்டுவெடிப்பு குற்றவாளிகள் இருவரையும் 10 நாட்கள் என்.ஐ.ஏ காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து அவர்களை காவலில் எடுத்த என்.ஐ.ஏ அதிகாரிகள், அவர்களிடம் குண்டுவைக்க திட்டம் தீட்டியது தொடர்பாகவும், குண்டு வைத்ததற்கான காரணம் மற்றும் பயங்கரவாத அமைப்புடனான தொடர்பு ஆகியவை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
The post பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு 2 குற்றவாளிகளுக்கும் 10 நாள் என்ஐஏ காவல் appeared first on Dinakaran.