சிறுவனின் குடும்பத்தினர் பொது மன்னிப்பு வழங்க மறுத்ததால் சவூதி சட்டப்படி கடந்த 18 ஆண்டுகளாக ரஹீம் சிறையில் வாடி உள்ளார். அவருக்கு கடந்த 2018ல் தூக்கு தண்டனை விதித்த சவூதி உச்சநீதிமன்றம், கடந்த 2022ல் அந்த தண்டனையை உறுதி செய்துள்ளது. இந்த நிலையில் தியா எனப்படும் இழப்பீடு பணத்தை பெற்றுக் கொள்ள சிறுவனின் குடும்பத்தினர் சம்மதித்ததால் இந்திய மதிப்பில் ரூ.33 கோடியை 24 லட்சம் வழங்க வேண்டி இருந்தது. இதற்காக கேரள மாநிலம் கோழிக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் மக்களிடம் பொது நிதி திரட்டப்பட்டது. சவூதி தலைநகர் ரியாத்தில் இருக்கும் கேரள மக்களும் நிதி அளித்ததை அடுத்து அப்துல் ரஹீம் சவுதி சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். கேரள மக்களின் இந்த மனிதாபிமான உதவி பலரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
The post சவூதி அரேபிய சிறையில் இருந்து கோழிக்கோடு இளைஞர் விடுதலை.. தூக்குத் தண்டனைக்கு மூன்று நாள் முன்பு ரூ.34 கோடி திரட்டல்!! appeared first on Dinakaran.