கொள்ளிடம் பகுதி பள்ளிகளில் சமூக நல்லிணக்க விழா

 

கொள்ளிடம், ஏப்.13:கொள்ளிடம் பகுதியில் உள்ள பள்ளிகளில் சமூக நல்லிணக்க நிகழ்ச்சி நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் உள்ள துவக்கப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சமூக நல்லிணக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

ஒவ்வொரு பள்ளியிலும் நடந்த நிகழ்ச்சியில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள்,ஊராட்சி உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். கொள்ளிடம் அருகே உள்ள திருமயிலாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நடைபெற்ற சமூக நல்லிணக்க நிகழ்ச்சிக்கு வட்டார வள மையம் மேற்பார்வையாளர் ஞான புகழேந்தி தலைமையேற்று பேசுகையில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு பள்ளியிலும் சமூக நல்லிணக்க நிகழ்ச்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் மூலம் எல்லோரும் சமம் என்ற நிலை அறிவுறுத்தப்படுகிறது என்றார். ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ், துணைத் தலைவர் சிவப்பிரகாசம் மற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள்,அதிகாரிகள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கொள்ளிடம் பகுதி பள்ளிகளில் சமூக நல்லிணக்க விழா appeared first on Dinakaran.

Related Stories: