தொழிலாளி விஷம்குடித்து சாவு

தூத்துக்குடி, ஏப்.13: தூத்துக்குடி அருகே திம்மராஜபுரம், பேரூரணி வடக்கு தெருவைச் சேர்ந்த மாசானமுத்து மகன் ஜெயசெல்வன்(39). கூலி தொழிலாளி. இவருக்கு அதிக குடிப்பழக்கம் இருந்ததாம். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால் மனம் உடைந்து காணப்பட்ட ஜெயசெல்வன், பேரூரணி அருகே உள்ள சுடுகாட்டுப்பகுதியில் விஷம் குடித்து மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தட்டப்பாறை இன்ஸ்பெக்டர் வனசுந்தர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.

The post தொழிலாளி விஷம்குடித்து சாவு appeared first on Dinakaran.

Related Stories: