இந்தியா கூட்டணி வென்றால் தான் நாட்டை காப்பாற்ற முடியும்: தமிழக காங். தலைவர் செல்வப்பெருந்தகை பேச்சு

நெல்லை: இந்தியா கூட்டணி வென்றால் தான், நாட்டை காப்பாற்ற முடியும் என தமிழக காங். தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நெல்லையில் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், சிவகங்கை வேட்பாளர்களுக்கு ஆதரவாக ராகுல் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். நெல்லை காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ், தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி, சிவகங்கை காங். வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம், மதுரை மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன் ஆவர்.

திமுக, விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். திமுக எம்.பி.கனிமொழி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். விழாவில் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, இந்தியா கூட்டணி வென்றால் தான், நாட்டை காப்பாற்ற முடியும் என தெரிவித்தார். 10 ஆண்டுகளாக ஒன்றிய பாஜக அரசு எதுவும் செய்யவில்லை. சொன்னதை மட்டுமல்ல சொல்லாத வாக்குறுதிகளையும் திமுக நிறைவேற்றியுள்ளது என கூறினார்.

The post இந்தியா கூட்டணி வென்றால் தான் நாட்டை காப்பாற்ற முடியும்: தமிழக காங். தலைவர் செல்வப்பெருந்தகை பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: