அதனால், அவர்கள், எங்களுடன் போட்டி போட முடியாது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில், அவர்கள், எங்களுடன் கூட்டணி வைத்த காரணத்தால்தான் 4 எம்எல்ஏக்கள் வெற்றிபெற முடிந்தது. இதை, அக்கட்சி தலைவர்கள் நன்கு அறிவார்கள். இத்தேர்தலுக்கு பிறகு அதிமுகவே இருக்காது என பாஜவினர் சொல்வது எல்லாம் வெற்று பிரசாரம். இதற்கு, எங்கள் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பொள்ளாச்சியில் நேற்று நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் தெளிவாக பதிலளித்துள்ளார். அதனால், பாஜ பற்றி பேசி, எங்களது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. இவ்வாறு எஸ்.பி.வேலுமணி கூறினார்.
The post வெறும் 3% ஓட்டுதான்பாஜ பத்தி பேசி வேஸ்ட் பொழப்ப பார்ப்போம்… எஸ்.பி.வேலுமணி ‘ஒரே போடு’ appeared first on Dinakaran.