பெட்ரோல் நிலையங்களிலும் தேர்தல் பிரசார விளம்பரங்கள்

 

காரைக்கால், ஏப்.10: காரைக்கால் மாவட்டத்தில் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் அதில் ஒரு அங்கமாக விளங்கும் ஸ்வீப்பின் சார்பில் பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றது. காரைக்கால் மாவட்டத்தில் 100% விழுக்காடு வாக்கினை பெறுவதற்காக பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுவதன் தொடர் நிகழ்வாக காரைக்காலில் அமைந்துள்ள அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் புதுச்சேரி மாநில நாடாளுமன்ற தேர்தலுகான பிரச்சார விளம்பரங்கள் வைக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்கள் மற்றும் வாக்காளர்கள் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் வைக்கப்பட்டுள்ளது. இந்த பேனரில் வாக்களிப்பது நமது உரிமை, நமது வாக்குரிமையை நிலைநாட்டுவோம், அனைவரும் வாக்களிப்போம் நாம் வாக்களித்து இந்திய ஜனநாயகத்தை காப்பாற்றுவோம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வினை உதவி வாக்காளர் பதிவு அதிகாரி மற்றும் தாசில்தார் பொய்யாத மூர்த்தி தலைமையில் ஸ்வீப்பின் ஒருங்கிணைப்பாளர் தாமோதரன் உள்ளிட்ட நிர்வாகிகள் காரைக்காலில் அமைந்துள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் இந்த விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

The post பெட்ரோல் நிலையங்களிலும் தேர்தல் பிரசார விளம்பரங்கள் appeared first on Dinakaran.

Related Stories: