கைது செய்தால்தான் இங்கிருந்து போவேன். ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவில் கைது செய்ய வேண்டும். அந்த பையனுக்கு 16 தையில் போட்டு இருக்காங்க. இதுக்கு மேல நான் எப்படி பிரசாரத்திற்கு போக முடியும். தேர்தல் நேரத்தில் இப்படி ரவுடியிசம் பண்ணா, நான் சும்மா இருப்பேனா? நடக்கிறது வேற. இவ்வாறு அவர் கூறினார். பின்னர், வேலூர் டிஎஸ்பி திருநாவுக்கரசு மற்றும் போலீசார் தர்ணாவில் ஈடுபட்ட மன்சூர் அலிகானிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையில் போலீசார் வழக்கு பதிவு செய்து சத்துவாச்சாரியை சேர்ந்த வினோத்(26), முபராக்(24) ஆகிய 2 பேரை கைது செய்தனர். விசாரணையில் கைதான வினோத் பாஜ கூட்டணி கட்சியான புதிய நீதிக்கட்சியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
The post ரூ.1,000 கொடுக்கலையாம்… மண்டைய உடைச்சுட்டாங்க… பாஜவினரை கைது பண்ணுங்க… போலீஸ் ஸ்டேஷனில் மன்சூர் அலிகான் தர்ணா appeared first on Dinakaran.