இந்நிலையில், கோவை சட்டமன்ற தொதிக்கு உட்பட்ட கோவை தெற்கு, சூலூர், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அண்ணாமலையும், எடப்பாடியும் கையில் துண்டை போட்டு குலுக்குவது போல் அச்சிட்டு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில், ‘அடிச்சாலும், புடிச்சாலும் அண்ணன், தம்பி நீயும், நானும் தான்! தேர்தலுக்காக பிரிவது போல நடித்து அதிமுக வாக்குகளை பாஜவுக்கு மடைமாற்றும் வியூகம், சபாஷ்!’ என அச்சிடப்பட்டு இருந்தது. தற்போது இது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில், பலரும் தங்களது பல்வேறு விதமான கமெண்டுகளை பதிவு செய்து பாஜ, அதிமுகவை கிழித்தெடுத்து வருகின்றனர். இதற்கிடைடே போஸ்டர்களை போலீசார் கிழித்து அகற்றினர்.
The post அடிச்சாலும், புடிச்சாலும் நீயும், நானும் அண்ணன், தம்பி: கோவையில் ஒட்டப்பட்ட போஸ்டர் appeared first on Dinakaran.