சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ அருள் மற்றும் பாமக மாவட்ட தலைவர் கதிர்ராசரத்தினம் ஆகியோர் சுரேஷ்பாபு வீட்டிற்கு வந்து அவர்களும் போலீசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். அதிர்ச்சியடைந்த பாஜவினர், வீட்டுக்குள் சோதனை நடத்த விடாமல் வாசலில் பாஜவினர் அமர்ந்து கொண்டனர். அப்போது, போலீசார் வருமான வரித்துறையினரை போல் நாங்கள் சோதனை நடத்தி, வீடியோ படம் எடுத்து விட்டு, ஒன்றுமில்லாவிட்டால் நாங்களும் சென்று விடுவோம் என்றனர். ஆனால், அதற்கு பாஜவினர் ஒப்புக்கொள்ளவில்லை. போலீசார் வீட்டிற்குள் நுழைய முயன்றபோது, பாஜகவினர் போலீசாருக்கு எதிராக, பாரத் மாதாகி ஜே என கோஷம் எழுப்பி தகராறில் ஈடுபட்டனர்.
The post சேலம் பாஜ தலைவர் வீட்டில் பணம் பதுக்கல்? பறக்கும் படையினரை சோதனை செய்ய விடாமல் எதிர்ப்பு appeared first on Dinakaran.