* கரு.பழனியப்பன் நாளை முதல் பிரசாரம்: திமுக அறிவிப்பு
திமுக வெளியிட்ட அறிக்கை: வரும் 19ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி, திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்து வாக்கு சேகரிக்கிறார். அதன் விவரம் வருமாறு: நாளை(ஏப். 11ம் தேதி)-ஆரணி, 12ம் தேதி – தருமபுரி, 13ம் தேதி கிருஷ்ணகிரி, 14ம் தேதி – ஈரோடு, 15ம் தேதி – கரூர். இந்த தேதிகளில் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மாவட்ட செயலாளர்கள் தங்களுக்குள் கலந்துபேசி, ஒன்றிணைந்து, பிரசாரம் தொகுதி வாக்காளர்களை சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்திட வேண்டுமென கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
* பிரபல நகைக்கடைக்கு சொந்தமான 10 கிலோ தங்கம் பறிமுதல்
சென்னை அசோக் நகர், சக்கரபாணி தெருவில் நேற்று முன்தினம் இரவு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த காரை சோதனை செய்த போது, அதில் 10 கிலோ தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது. அந்த 10 கிலோ நகைக்கான ஆவணங்களை காரில் வந்தவர்களிடம் தேர்தல் பறக்கும் படையினர் கேட்டனர். அதற்கு அவர்கள், மலபார் கோல்டு நகைக்கடைக்கு சொந்தமான நகைகள் என்றும், தலைமை அலுவலகத்தில் இருந்து ஈக்காட்டு தாங்கல் பகுதியில் உள்ள கிளை அலுவலகத்திற்கு எடுத்து செல்வதாகவும் தெரிவித்தனர். ஆனால் தேர்தல் பறக்கும் படையினர் ஆவணங்களை காட்டி விட்டு நகைகளை மீட்டு செல்லுங்கள் என்று கூறி 10 கிலோ நகைகளையும் பறிமுதல் செய்து, சைதாப்பேட்டையில் உள்ள அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
The post திருமாவளவன் வீட்டில் ஐடி ரெய்டு appeared first on Dinakaran.