அச்சங்கத்துக்கு வழங்கியது போக மீதமுள்ள ரூ.4 கோடியில் இருந்து வரும் வட்டித் தொகையில் 2007 முதல் தொடர்ந்து உதவித் தொகை வழங்கப்படுகிறது. கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் இதுவரை வழங்கிய நிதி ரூ.5 கோடியே 97 லட்சத்து 90 ஆயிரம். கடந்த மார்ச் மாதத்திற்கு வட்டியாக கிடைத்த தொகையில் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார். நிதி பெறுவோர் வெளி மாவட்டங்களிலிருந்து வந்துபோகிற செலவினத்தை தவிர்ப்பதற்காக தபால் மூலம் வரைவுக் காசோலையாக அனுப்பப்படுகிறது என்று திமுக தலைமை அறிவித்துள்ளது.
The post கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் ரூ.2 லட்சம் கல்வி உதவி நிதி appeared first on Dinakaran.