பாஜ கவுன்சிலர் கைது

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த அதியபெரமனூர் பேரூராட்சி 14வது வார்டு கவுன்சிலர் குருசேவ். பாஜவை சேர்ந்த இவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு காரில் 200க்கும் மேற்பட்ட பாஜ சின்னம் பொருந்திய பதாகைகளை எடுத்து சென்றார். அப்போது, திருப்பத்தூர் அடுத்த குனிச்சி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதற்கான ஆவணங்களை கேட்டனர். ஆனால் அதனை வழங்க மறுத்த குருசேவ் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படை அலுவலர் முருகதாஸ் அளித்த புகாரின்பேரில் 3 பிரிவுகளின் கீழ் கந்திலி போலீசார், வழக்கு பதிவு செய்தனர். இந்தநிலையில் நேற்று அதிகாலை போலீசார் அவரை கைது செய்து விசாரணைக்கு பின் விடுவித்தனர்.

The post பாஜ கவுன்சிலர் கைது appeared first on Dinakaran.

Related Stories: