திருவாரூரில் ராஜ்நாத் சிங் பிரச்சாரத்தில் காலி நாற்காலிகள்: பாஜக தலைவர்கள் அதிர்ச்சி

திருவாரூர்: திருவாரூரில் ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்ற பிரச்சாரத்தில் கூட்டமே இல்லாததால் பாஜக தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நாகை பாஜக வேட்பாளர் எஸ்.ஜி.எம்.ரமேஷை ஆதரித்து ராஜ்நாத் சிங் பிரச்சாரம் செய்தபோது மக்கள் கலைந்து சென்றனர். திருவாரூர் பிரச்சாரத்தில் கூட்டமே இல்லாமல் வெறிச்சோடியதால் காலி நாற்காலிகளுக்கு மத்தியில் ராஜ்நாத் சிங் பேசினார். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்தியில் பேசிய போது கூட்டத்தில் இருந்தவர்கள் அடுத்தடுத்து வெளியேறினர்.

The post திருவாரூரில் ராஜ்நாத் சிங் பிரச்சாரத்தில் காலி நாற்காலிகள்: பாஜக தலைவர்கள் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: