இந்த நிலையில், திருவாரூர் பிரச்சாரத்தில் மக்கள் கூட்டமே இல்லாமல் வெறிச்சோடியதால் காலி நாற்காலிகளுக்கு மத்தியில் ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியுள்ளார். நாகை பாஜக வேட்பாளர் எஸ்.ஜி.எம்.ரமேஷை ஆதரித்து ராஜ்நாத் சிங் தாமரை சின்னத்திற்கு பிரச்சாரம் செய்தபோது மக்கள் கூட்டம் கூட்டமாக கலைந்து சென்றனர். கூட்டத்தில் ராஜ்நாத் சிங் ஹந்தியில் பேசியதால் மக்களுக்கு புரியாமல் எழுந்து சென்றனர். இதனால் பல பகுதியில் சேர்கள் காலியாக கிடந்தது. கட்சி நிர்வாகிகள் தடுத்தும் மக்கள் அதை கேட்காமல் கலைந்து சென்றனர்.
காலி சேர்கள் மத்தியில் ராஜ்நாத் சிங் உரையாற்றினார். அரியலூர், கரூர், திருச்சியில் நட்டாவின் பிரச்சாரத்தில் கூட்டம் சேராத நிலையில் திருவாரூரிலும் மக்கள் திரளாததால் பாஜகவினர் அதிர்ச்சி அடைந்தனர். பாஜக தேசிய தலைவர்கள் அடுத்தடுத்து தமிழ்நாட்டுக்கு வரும் நிலையிலும் பிரச்சாரத்தில் கூட்டம் சேராததால் பாஜக நிர்வாகிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
The post ஜே.பி.நட்டாவைத் தொடர்ந்து திருவாரூர் பிரச்சாரத்தில் காலி நாற்காலிகளுக்கு மத்தியில் ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு : பாஜக நிர்வாகிகள் ஏமாற்றம்!! appeared first on Dinakaran.