ரூ.7.86 கோடி தங்கம் பறிமுதல்

சேலம்- நாமக்கல் மாவட்ட எல்லை பகுதியான ராசிபுரம் அடுத்த மல்லூர் அருகே, தேர்தல் பறக்கும் படை அலுவலர் சீனிவாசன் தலைமையில், அதிகாரிகள் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சேலத்தில் இருந்து மதுரையை நோக்கி சென்ற தனியார் கொரியர் சர்வீஸ் வாகனத்தை, அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அந்த வேனில் நிறைய நகைகள் இருப்பது தெரிய வந்தது. இந்த சோதனையில் ரூ.7.86 கோடி மதிப்பிலான 10 கிலோ தங்கம், 29 கிலோ வெள்ளி நகைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அதிகாரிகள் வாகனத்தில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை பறிமுதல் செய்து, ராசிபுரம் தாசில்தார் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

 

The post ரூ.7.86 கோடி தங்கம் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: