நாகை – இலங்கை இடையே மே 19-ல் கப்பல் போக்குவரத்து தொடக்கம்

நாகை: இலங்கை – காங்கேசன்துறை இடையே மே 19-ம் தேதி கப்பல் போக்குவரத்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாகையில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு நாளை முதல் கப்பல் போக்குவரத்து தொடங்க இருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கனமழை அறிவிப்பு எதிரொலியாக நாகை இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கப்பல் போக்குவரத்து தொடங்குவது மீண்டும் தாமதம் ஏற்பட்டதற்கு டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளிடம் தனியார் நிறுவனம் வருத்தம் தெரிவித்தது.

The post நாகை – இலங்கை இடையே மே 19-ல் கப்பல் போக்குவரத்து தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: