பிரதமர் மோடி பேசுவதற்கு முன்பாக பேசிய நிதிஷ் குமார், ‘‘மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 4 லட்சம் இடங்களில்…’’ என கூறி தடுமாறிய நிலையில், தன்னை திருத்திக் கொண்டு, ‘‘4 ஆயிரம் இடங்களில் வெற்றி பெறும்’’ எனக் கூறிக் கொண்டே பிரதமர் மோடியை பார்த்தார்.
பிரதமர் முன்பாகவே முதல்வர் நிதிஷ் உளறுவதை பார்த்து அக்கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளன. பலரும் நிதிஷை கிண்டலடிக்கின்றனர். ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் செய்தி தொடர்பாளர் சரிகா பஸ்வான், ‘‘முதல்வர் நிதிஷ் முதலில் 4 லட்சம் எம்பிக்கள் பெற வாழ்த்து தெரிவிக்க விரும்பினார். பின்னர் அது கொஞ்சம் அதிகமாக இருக்கும் என நினைத்து 4 ஆயிரத்தோடு நிறுத்திக் கொண்டிருக்கலாம்’’ என கேலி செய்துள்ளார்.
The post ‘4 லட்சம்… இல்ல இல்ல 4,000 சீட் ஜெயிப்போம்’:மோடி பேரணியில் நிதிஷ்குமார் உளறல் appeared first on Dinakaran.