இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இதுகுறித்து போலீஸ் அதிகாரி சுனிதா பாவா கூறுகையில், ‘பாதிக்கப்பட்ட பெண்ணின் மகன், அதேபகுதியை சேர்ந்த பெண்ணை காதலித்து குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்துகொண்டார். அதனால் ஆவேசமடைந்த திருமணமான பெண்ணின் குடும்பத்தினர், வீட்டில் தனியாக இளைஞரின் தாயை அடித்து துன்புறுத்தி அரை நிர்வாண நிலையில் வீதியில் அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தில் திருமணமான பெண்ணின் தாய் குல்விந்தர் கவுர் மணி, அவரது சகோதரர்கள் ஷரஞ்சித் சிங் ஷானி, குர்சரண் சிங், குடும்ப நண்பரான சன்னி சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவான மற்றொருவரை தேடி வருகிறோம்’ என்றார்.
The post ஓடிப்போய் திருமணம் செய்து கொண்ட இளைஞரின் தாயை அரை நிர்வாணமாக இழுத்து சென்ற கும்பல்: இளம்பெண்ணின் குடும்பத்தினர் அட்டூழியம் appeared first on Dinakaran.