இலவச முட்டை வண்டி வழங்கும் விழா

 

நாமக்கல், ஏப்.7: என்இசிசி மூலம் முட்டை விற்பனையை அதிகரிக்கும் வகையில், பயனாளிகளை தேர்வு செய்து அவர்களுக்கு இலசமாக முட்டை வண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது என்இசிசி தேசிய தலைவர் அனுராதா தேசாய் மூலம், இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, கூடுதல் பயனாளிகளுக்கு முட்டை வண்டிகள் வழங்கப்படுகிறது. 2024ம் ஆண்டு தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் முட்டை வண்டி விநியோகத் திட்டத்தின் கீழ், 4வது முட்டை வண்டி வழங்கும் விழா, மோகனூர் பஸ் நிலையம் அருகில் நடைபெற்றது.

நாமக்கல் மண்டல என்இசிசி தலைவர் சிங்கராஜ், புதிய முட்டை வண்டியை, பயனாளி தர்மன் என்பவருக்கு வழங்கி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். இதில் என்இசிசி மண்டல உறுப்பினர் சுப்ரமணியம், மோகனூர் வட்டார தலைவர் ராஜேந்திரன், என்இசிசி உதவி பொது மேலாளர் பாலசுப்பிரமணியம் மற்றும் கோழிப்பண்ணையாளர்கள் கலந்து கொண்டனர்.

The post இலவச முட்டை வண்டி வழங்கும் விழா appeared first on Dinakaran.

Related Stories: