பெண்ணிடம் நகை பறிப்பு

திருப்பூர், ஏப். 7: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன்.(31) இவரது மனைவி கவிதா(27), இவர்கள் குடும்பத்துடன் பழவஞ்சிபாளையம் பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பாண்டியன் பனியன் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்ற பின், மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டிலிருந்துள்ளனர். அப்போது பைக்கில் வந்த 2 பேர் கவிதாவிடம் முகவரி கேட்டுள்ளனர்.

கவிதா முகவரி தெரியாது எனக் கூறவே திடீரென இரண்டு பேரும் வீட்டிற்குள் புகுந்து கவிதாவை மிரட்டி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துச் சென்றனர். இதுகுறித்து புகாரின் பேரில் வீரபாண்டி போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பெண்ணிடம் நகை பறிப்பு appeared first on Dinakaran.

Related Stories: