கோவில்பட்டியில் பரிதாபம் நடந்து சென்ற லாரி டிரைவர் கீழே விழுந்து பலி

கோவில்பட்டி, ஏப். 7:விருதுநகர் மாவட்டம் பட்டம்புதூர் கும்பம்பட்டி புதிய காலனியைச் சேர்ந்தவர் வெங்கடாசலபதி மகன் சுந்தரமூர்த்தி (23). லாரி டிரைவரான இவர், நேற்று நெல்லையில் பழைய பேப்பர்களை ஏற்றிக் கொண்டு மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தார். கோவில்பட்டி புதிய பேருந்து நிலையம் அருகே சென்ற போது லாரியை நிறுத்திவிட்டு கீழே இறங்கி பாத்ரூம் செல்வதற்காக நடந்து சென்றார். அப்போது அவர், கால் தடுமாறி சாலையோரம் கீழே விழுந்தார்.

இதில் முகத்தில் படுகாயமடைந்த சுந்தரமூர்த்தி சம்பவ இடத்திலேயே இறந்தார்.தகவல் அறிந்து கோவில்பட்டி மேற்கு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லிதேவ் ஆனந்த், எஸ்ஐ செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கோவில்பட்டியில் பரிதாபம் நடந்து சென்ற லாரி டிரைவர் கீழே விழுந்து பலி appeared first on Dinakaran.

Related Stories: