பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை; மாட்டு வியாபாரியிடம் ₹61 ஆயிரம் பறிமுதல்

கலசபாக்கம், ஏப். 7: கலசபாக்கம் அருகே பறக்கும் படை அதிகாரிகள் நேற்று வாகன பரிசோதனையில் ஈடுபட்டபோது மாட்டு வியாபாரியிடம் ₹61 ஆயிரம் பறிமுதல் செய்து உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைத்தனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுத்து நிறுத்த தேர்தல் ஆணையம் சட்டமன்ற தொகுதி வாரியாக பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்புக்கு குழுவினரை நியமித்து 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். கலசபாக்கம் சட்டமன்ற தொகுதியில் 6 குழுக்கள் 24 மணி நேரமும், சூழ்ச்சி முறையில் வாகன பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று கலசபாக்கம் பகுதியில் பறக்கும் படை அதிகாரி லட்சுமி தலைமையில் போலீசார் வாகன பரிசோதனையில் ஈடுபட்டனர். கலசபாக்கம் அடுத்த அருணகிரி மங்கலம் கூட்டு சாலையில் வாகன பரிசோதனையில் ஈடுபட்ட போது கலசபாக்கம் அடுத்த புதுப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த மாட்டு வியாபாரி ரவியிடம் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ₹61.100 பணத்தை கைப்பற்றி கலசபாக்கம் தாலுக்கா அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தியிடம் ஒப்படைத்தனர்.

The post பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை; மாட்டு வியாபாரியிடம் ₹61 ஆயிரம் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: