பாஜ ஆட்சி காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு, காஸ் விலை இரு மடங்கு அதிகரித்து விட்டது. தமிழகம் உயர்கல்வியில் முதலிடத்தில் உள்ளது. புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் ஏழை மக்களின் கல்வியை பாஜ அரசு பிடுங்க நினைக்கிறது. நீட் தேர்வை போன்று அனைத்து கல்லூரிகளிலும் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு கொண்டு வருவதற்கு பாஜ அரசு முயற்சிக்கிறது. இந்தியாவில் உள்ள அருணாசல பிரதேச மாநிலத்தை சீன அரசு ஆக்கிரமிப்பு செய்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் எந்த நடவடிக்கை எடுக்காமலும் பாஜ நாட்டின் மீது பற்றின்றி உள்ளது. நாட்டு பற்றற்ற ஒன்றிய பாஜ அரசை மக்கள் தூக்கி வீசுவார்கள்,’என்றார்.
The post பாஜ, அதிமுக ஸ்டிக்கர் கட்சிகள் தேர்தலுக்கு பிறகு ஒட்டிக்கொள்ளும்: கனிமொழி எம்பி ‘டோஸ்’ appeared first on Dinakaran.