பெரம்பலூரில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி

பெரம்பலூர் மாவட்டத்தில் 100சதவீதம் வாக்கு பதிவை வலியுறுத்தி அஸ்வின் குழுமத்தில் பணியாற்றும் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்துகொண்ட வாக்காளர் விழிப்புணர்வு பேரணியானது, பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் தொடங்கி, பாலக்கரை அருகே உள்ள தனியார் மைதானத்தில் முடிவடைந்தது. பேரணியின் முடிவில் வாக்களிக்கும்போது விரலில் வைக்கப்படும் மையுடன் உள்ள கை வடிவில் அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி நின்று வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்து கோஷங்களை எழுப்பினார்கள். மாவட்ட ஆட்சித்தலைவர் /மாவட்ட தேர்தல் அலுவலர் க.கற்பகம்,மெழுகுவர்த்தி ஏந்தி நின்று, இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

The post பெரம்பலூரில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Related Stories: