அதேநேரம் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகமும் இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது. இவ்விவகாரம் சர்வதேச அளவில் பரபரப்பபாக பேசப்பட்ட நிலையில், ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அளித்த பேட்டியில், ‘அவர்கள் (தீவிரவாதிகள்) பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்றால், அவர்களைக் கொல்வதற்காக நாங்கள் பாகிஸ்தானுக்குள் நுழைவோம். அண்டை நாடுகளுடன் நல்லுறவை பேணவே இந்தியா விரும்புகிறது. யாராவது இந்தியாவுக்குள் நுழைந்து தீவிரவாத நடவடிக்கைகளை ஊக்குவிக்க முயன்றால், அவர்களை விட்டுவைக்க மாட்டோம்’ என்றார்.
The post எல்லை தாண்டி ஓடிய தீவிரவாதிகளை கொல்ல பாகிஸ்தானுக்குள் இந்தியா நுழையும்: ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் பேட்டி appeared first on Dinakaran.