நெல்லை அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது ‘‘போக்சோ”

நெல்லை, ஏப். 6: மானூர் அருகே உள்ள அழகியபாண்டியபுரத்தை சேர்ந்தவர் சின்னச்சாமி மகன் மனோகரன்(30). இவர், கடந்த 18-12-2023ல் தாழையூத்து பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். தகவலறிந்த பாளை நகர்புற நகர்நல அலுவலர் ராணி அற்புதமணி, அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். நெல்லை புறநகர் அனைத்து மகளிர் போலீசார் மனோகரன் மீது போக்சோ வழக்கும், இருதரப்பு பெற்றோர் மீது குழந்தைகள் திருமணம் தடுப்பு சட்டத்தின் கீழும் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

The post நெல்லை அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது ‘‘போக்சோ” appeared first on Dinakaran.

Related Stories: