குளத்தில் மூழ்கி வாலிபர் சாவு

வில்லிபுத்தூர், ஏப்.6: வில்லிபுத்தூர் அருகே குளத்தில் குளிக்க சென்ற வாலிபர் வழுக்கி விழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். வில்லிபுத்தூர் மங்காபுரம் மேல்பக்கம் வடக்கு தெருவை சேர்ந்தவர் தர்மராஜ் மகன் முத்துப்பாண்டி(20). இவர் நேற்று முன்தினம் வில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோனேரி குளத்தில் நண்பர்களுடன் குளிக்க சென்றார். அப்போது படியில் இருந்து திடீரென வழுக்கி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்தார். இது தொடர்பாக திருவில்லிபுத்தூர் நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்று இறந்த முத்துப்பாண்டியின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக வில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post குளத்தில் மூழ்கி வாலிபர் சாவு appeared first on Dinakaran.

Related Stories: