பரமக்குடியில் விளையாட்டு விழா

பரமக்குடி, ஏப். 6: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள உலகநாதபுரம் அருள் சான்று சிறப்புப் பள்ளியில் நடைபெற்ற 14வது ஆண்டு விளையாட்டு விழாவிற்கு உலகநாதபுரம் பங்கு பணியாளர் அருள்பணி ஞானதாசன் தலைமை தாங்கினார். பள்ளியின் தாளாளர் அருள் சகோதரர் ஜெரால்ட் முன்னிலை வகித்தார். இயக்குனர் அருள் சகோதரர் அகஸ்டின் அனைவரையும் வரவேற்றார். தொழிலதிபர் பன்னீர்செல்வம், அருள் சகோதரர் ஸ்டீபன் சவரி ராஜ், முனைவர் சாதிக் அலி, முனைவர் பிரிட்டோராஜ், கோபி, அருண் சகோதரர் தாமஸ், ஜான், திவ்யநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். முன்னதாக மாற்றுத்திறனாளி குழந்தைகளின் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதனைதொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

The post பரமக்குடியில் விளையாட்டு விழா appeared first on Dinakaran.

Related Stories: