ஆனால் 11.30 மணிக்கு வந்த சீமான், காரில் இருந்து நடந்து செல்லாமல், நேராக பிரசார வேனுக்கு சென்றார். வெயில் அதிகம் இருப்பதால் அவர் வருவதற்கு முன்பே பிரசார வேன் வரவழைக்கப்பட்டு, ஏசியை போட்டு குளுகுளு என வைத்து இருந்தனர். அதில், பிரசாரம் செய்த சீமான், பின்னர் வேனில் இருந்து இறங்கி மீண்டும் அப்படியே காரில் ஏறி சென்றார். வெயில் தாங்காமல் தொண்டர்கள் கடும் அவதிக்கு உள்ளான நிலையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மட்டும் குளு குளு ஏசியில் பிரசாரம் செய்துவிட்டு சென்றது சலசலப்பை ஏற்படுத்தியது.
The post வெயிலில் தொண்டர்களை நிற்க வைத்து சொகுசு ஏசி வேனில் சீமான் பிரசாரம் appeared first on Dinakaran.