நெற்குன்றம் அருகே சொகுசு காரில் கடத்திய 1 டன் குட்கா பறிமுதல்

புழல்: நெற்குன்றம் அருகே சொகுசு காரில் கடத்திய 1 டன் குட்காவை செங்குன்றம் போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்தனர். செங்குன்றம் போக்குவரத்து ஆய்வாளர் சோபிதாஸ் தலைமையில் போக்குவரத்து போலீசார் நேற்று வண்டலூர்-மீஞ்சூர் பைபாஸ், நெற்குன்றம் அருகே நல்லூர் சர்வீஸ் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வண்டலூரில் இருந்து மீஞ்சூர் நோக்கி வந்த குஜராத் பதிவு எண் கொண்ட ஒரு சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்ய முயன்றனர். அப்போது, கார் மின்னல் வேகத்தில் நிற்காமல் சென்றது.

போலீசார், உடனே அந்த சொகுசு காரை விரட்டிச் சென்றனர். அப்போது, சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி நின்றது. இதையடுத்து, கார் டிரைவர் தப்பிய நிலையில், போலீசார் காரை சோதனை செய்தனர். அதில் ஒரு டன் குட்கா இருந்தது. அதை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்து தப்பியோடிய கார் டிரைவர் மற்றும் குட்கா கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

The post நெற்குன்றம் அருகே சொகுசு காரில் கடத்திய 1 டன் குட்கா பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: