இந்த மனு நீதிபதி டி.வி.தமிழ்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பொருளாதார குற்றப்பிரிவு சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் ஆஜராகி, ஆருத்ரா நிறுவனத்தில் முதலில் முதலீட்டாளராக இருந்த சூசைராஜ் பின்னர் அந்த நிறுவனத்தின் திருச்சி கிளை இயக்குநராக நியமிக்கப்பட்டார். பின்னர் அவர் பொதுமக்களிடம் 10 கோடி ரூபாய் வரை முதலீடுகளை வசூலித்துள்ளார். அவருக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புகள் உள்ளது. விசாரணை நடத்த வேண்டியுள்ளதால் ஜாமீன் வழங்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார். காவல் துறை தரப்பு வாதங்களை ஏற்ற நீதிபதி, சூசைராஜின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
The post ஆருத்ரா கோல்ட் ரூ.2,438 கோடி மோசடி வழக்கில் கிளை இயக்குநரின் ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.