வடமதுரை அருகே டூவீலரிலிருந்து தவறி விழுந்து பெண் பலி

வடமதுரை, ஏப். 4: வடமதுரை அருகே பிலாத்து கிராமம் முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் சாதிக் அலி (50). ஊராட்சி பம்ப் ஆபரேட்டர். இவரது மனைவி சாபுரா பீவி (45). இருவரும் நேற்று முன்தினம் டூவீலரில் திண்டுக்கல்லில் துணி எடுக்க சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். திண்டுக்கல்- திருச்சி நான்கு வழிச்சாலையில் கல்லாத்துப்பட்டி பாலம் அருகே வந்த போது டூவீலர் நிலைதடுமாறியதில் இருவரும் கீழே விழுந்து விட்டனர். இதில் படுகாயமடைந்த சாபுரா பீவியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சாபுரா பீவி உயிரிழந்தார். இதுகுறித்து வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வடமதுரை அருகே டூவீலரிலிருந்து தவறி விழுந்து பெண் பலி appeared first on Dinakaran.

Related Stories: