மாடு வாங்க வந்தவர்களிடம் ₹1.45 லட்சம் பறிமுதல் ஆந்திராவில் இருந்து

கே.வி.குப்பம், ஏப்.3: ஆந்திராவில் இருந்த மாடு வாங்க வந்தவர்களிடம் இருந்து ₹1.45 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வேலூர் மாவட்டம், கே.வி. குப்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிலை கண்காணிப்பு குழுவினர் காட்பாடி- குடியாத்தம் சாலை வடுகந்தாங்கல் பகுதியில் நேற்று காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த லோடு ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர். ஆட்டோவில் வந்த ஆந்திர மாநிலம் பலமநேரை சேர்ந்த கனகராஜ் என்பவரிடம் ₹71 ஆயிரம் இருந்தது. அந்த பணத்தை கைப்பற்றி நடத்திய விசாரணையில், அவர் பொய்கை மாட்டு சந்தைக்கு மாடு வாங்க வந்தது தெரியவந்தது. ஆனால் அந்த பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்தனர். இதனை அடுத்து பொய்கை சந்தைக்கு மாடு வாங்க வந்த மற்றொரு லோடு வேனை நிறுத்தியதில், சித்தூரிலிருந்து வந்த கரம்பாஷா என்பவரிடம் உரிய ஆவணம் இல்லாததால் ₹73,500 என மொத்தம் ₹1,44,500 பறிமுதல் செய்தனர். பின்னர், பறிமுதல் செய்த பணத்தை கே.வி. குப்பம் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

The post மாடு வாங்க வந்தவர்களிடம் ₹1.45 லட்சம் பறிமுதல் ஆந்திராவில் இருந்து appeared first on Dinakaran.

Related Stories: