அதன்படி, காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கலைச்செல்வி மோகன் தலைமையில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நேற்று காஞ்சிபுரம் செவிலிமேடு கிராமத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கிலிருந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 1280 பேலட் யூனிட்ஸ்களும், நாமக்கல் மாவட்டத்திற்கு 1670 பேலட் யூனிட்ஸ்களும் பிரித்து வழங்கப்பட்டது. நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், தொடர்பு அலுவலரும், சிறப்பு மாவட்ட அலுவலருமான (நில எடுப்பு) சென்னை கன்னியாகுமரி தொழிற்வழி தட திட்டம் ராமமூர்த்தி, புதுக்கோட்டை மற்றும் நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த வட்டாட்சியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
The post காஞ்சிபுரத்தில் இருந்து புதுக்கோட்டை, நாமக்கல்லுக்கு 2950 பேலட் யூனிட்ஸ்கள் appeared first on Dinakaran.