திருமணமான ஐந்து மாதங்களுக்குப் பிறகு, அந்தப் பெண் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். தனது பெற்றோருடன் வசித்து வந்த அவர், தனது கணவரிடம் ஜீவனாம்சம் கேட்டு பிந்த் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தொடர்ந்து தனது மனைவியின் பெற்றோர் தன்னை மிரட்டியதாக அந்த வாலிபரும் போலீசில் புகார் அளித்தார்.
இரு தரப்பினரையும் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், தனது கணவரைக் கொல்பவருக்கு ரூ. 50,000 பரிசு வழங்கப்படும் என்று தனது செல்போனில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை பதிவிட்டார். அதை பார்த்த அந்த வாலிபர், அதனை ஸ்கீரின் ஷாட் எடுத்து, மீண்டும் போலீசில் மற்றொரு புகாரை அளித்தார். அதையடுத்து அந்த பெண் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாக பாஹ் இன்ஸ்பெக்டர் ஷியாம் சிங் தெரிவித்தார்.
The post குடும்ப பிரச்னை போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றதால் கணவரை கொன்றால் ₹50,000 பரிசு தொகை: வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்த பெண் மீது வழக்கு appeared first on Dinakaran.